இன்று கதை முடிந்தது! ஆட்டம் மீண்டும் நாளை தொடரும்; ஐசிசி அறிவிப்பு

இன்று கதை முடிந்தது! ஆட்டம் மீண்டும் நாளை தொடரும்; ஐசிசி அறிவிப்பு


match stopped today will be resumed tomorrow

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆட்டம் இன்று நடைபெறாது என ஐசிசி அறிவித்துவிட்டது. ஏற்கனவே நிர்ணயித்தது போன்று நாளை ஆட்டம் தொடரும். அதாவது இன்று எந்த ஓவரில் ஆட்டம் நிறுத்தப்பட்டதோ அதே ஓவரில் இருந்து மீண்டும் ஆட்டம் தொடரும். புதிதாக ஆட்டம் நடைபெறாது. நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3 மணியளவில் தொடரும்.