திக் திக் நிமிடங்கள்! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப்! முழு விவரம்!



KXIP vs SRH IPL 2019 22nd match result

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 22 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் கொல்கத்தா, சென்னை, பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளது. 22 வது போட்டியானது பஞ்சாப் மற்றும் கைதராபாத் அணிகள் இடையே நடைபெற்றது.

இதில், முதலில் பேட் செய்த கைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்திருந்தது. 151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெய்ல் ஆட்டத்தின் தொடக்கத்திலையே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ipl t20

அதன்பின்னர் நிதானமாக ஆடிய பஞ்சாப் அணி வீரர் KL ராகுல் இறுதி வரை நிதானமாக ஆடி பஞ்சாப் அணியை வெற்றிபெற செய்தார். 6 பந்துக்கு 11 ஓட்டங்கள் பெற்றால் பஞ்சாப் அணி வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஆடடுமுனையில் நின்ற சாம் குர்ரான் முதல் மூன்று பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதி மூன்று பந்துகளில் 6 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட் செய்த ராகுல் நான்காவது பந்தில் ஒரு பவுண்டரி விளாசி பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தார். மீதமுள்ள இரண்டு பந்துகளில் இரண்டு ஓட்டம் பெற்றால் வெற்றி என்ற நிலையில் ஐந்தாவது பந்தில் அருமையான இரண்டு ஓட்டங்கள் மூலம் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. கடைசி ஓவரை கைதராபாத் அணியின் நபி வீசினார்.

ipl t20