இதுதான் என்னுடைய கொள்கை.! அரசியல் என்ட்ரி குறித்து செம தெளிவாக நடிகர் ராகவா எடுத்துள்ள முடிவு!!
கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ்! வைரல் வீடியோ!
கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ்! வைரல் வீடியோ!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் நேற்று நாட்டிங்காமில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவதாக இருந்த 18 ஆவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாகவே நாட்டிங்காமில் வெளுத்து வாங்கும் மழை நேற்று போட்டி துவங்குவதற்கு முன்னே பெய்ய ஆரம்பித்தது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. சிறிது நேரம் மழை நின்றதும் நடுவர்கள் மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சிறிதாக பெய்துகொண்டிருந்த மழை கனமழையாக மாறியது. இதனால் போட்டியினை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் நாட்டிங்காம் மைதானத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் வருட பகவானிடம் கையெடுத்து கும்பிடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
.@JadhavKedar asking Rain to shift to Maharashtra!🤣💛
— Whistle Podu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) 13 June 2019
Video Courtesy : @SakalMediaNews @ChennaiIPL #Teamindia #INDvNZ pic.twitter.com/H3UVID3QGc
அந்த வீடியோவில் பேசியிருக்கும் கேதர், நாட்டிங்காமில் விளையாட்டிற்கு இடையூறு செய்வதற்கு பதிலாக இந்தியாவில் வறட்சி நிலவும் தன்னுடைய சொந்த மாநிலமான மகாராஷ்டிராவிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். அங்குள்ள மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தண்ணீர் தேவை என்றும்,நாட்டிங்காமில் கொட்டித்தீர்ப்பதற்கு பதிலாக அங்கு பெய்தால் அங்கு தண்ணீர் அளவு உயரும் என்று பேசியுள்ளார்.