வெற்றி பெறுவது எங்கள் நோக்கமல்ல; உண்மையை போட்டுடைத்த ஹர்திக் பாண்டியா.!

வெற்றி பெறுவது எங்கள் நோக்கமல்ல; உண்மையை போட்டுடைத்த ஹர்திக் பாண்டியா.!



ipl 2019 mi vs kkr - won kkr - hardick pandeya

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏறக்குறைய ஐபில் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி டெல்லி அணி 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியான சென்னை அணி தரவரிசையில் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த 47வது லீக் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 2 விக்கெடுக்கு 232 ரன்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய அந்த அணியின் ஆண்ரே ரசல் அதிகபட்சமாக 40 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 80 ரன்கள் குவித்தார்.

IPL 2019

அடுத்து இமாலய இலக்கை துரத்த வந்தது மும்பை. அந்த அணியின் துவக்க வீரர் டி காக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து ரோஹித் 12, ஈவான் லீவிஸ் 15, சூர்யகுமார் 26, பொல்லார்டு 20 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

இதனால் மும்பை அணி தோல்வியை தழுவுவது உறுதியாகிவிட்டது என்று அனைவரும் எண்ணிய நிலையில் மும்பை அணியை வெற்றியின் அருகில் கொண்டு வந்தார் பாண்டியா.  34 பந்துகளை சந்தித்த அவர் 91 ரன்கள் குவித்து வெளியேறினார். இதில் 9 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும். முடிவில் 20 ஓவர்களில் மும்பை அணி 198 ரன்கள் மட்டுமே சேர்த்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

IPL 2019

இப்போட்டி முடிந்ததும் பரிசளிப்பு நிகழ்ச்சியில், கலந்து கொண்ட ஹர்திக் பாண்டியாவிடம் இப்போட்டி குறித்து கேட்கப்பட்டது. அப்போது மிகவும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தீர்கள். இப்போட்டியில் வெற்றி வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை இருந்ததா என்று வினா எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்து பேசிய பாண்டியா: இந்த மிகப்பெரிய இலக்கை சேஸிங் செய்து வெற்றி பெறுவது கடினம் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல.

மிகப்பெரிய இந்த இலக்கின் அருகே நெருங்க வேண்டும் என்பதுதான் முதன்மையான இலக்காக இருந்தது. தோல்வி அடைந்தாலும் மிகக்குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் அமைய வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. ஏனெனில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு நுழைவதற்கு ரன் ரேட் அடிப்படையில் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம் என்று தெரிவித்தார்.