பரிதாபமான நிலையில் மும்பை அணி! புலம்பி தீர்க்கும் மும்பை அணி ரசிகர்கள்!

பரிதாபமான நிலையில் மும்பை அணி! புலம்பி தீர்க்கும் மும்பை அணி ரசிகர்கள்!


ipl-2019-final-chennai-vs-mumbai-first-innings-update

ஐபில் சீசன் 12 இன்றுடன் முடிவடைகிறது. ஐபில் சீசன் 12 கோப்பையை வெல்லும் முனைப்புடன் சென்னை அணியும் மும்பை அணியும் கைதராபாத்தில் இன்று விளையாடி வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதல் மும்பை அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மும்பை அணி வீரர் டீகக் 17 பந்துகளில் 4 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்து அணியின் எணிக்கையை உயர்த்தினார். அவரை அடுத்து விளையாடிய வீரர்கள் அதிராட்டியாக விளையாடாவிட்டாலும் இறுதியில் பொல்லார்ட், கார்த்திக் பாண்டியா இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

IPL 2019

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்துள்ளது. 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் சென்னை அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங்கை தொடங்க உள்ளது.

இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி இமாலய இலக்கை தொடும் என்று மும்பை அணி ரசிகர்கள் காத்திருந்த நிலையில் மும்பை அணியின் இந்த எளிமையன இலக்கு மும்பை அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.