அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடும் அஜித்; தொழில்நுட்பத்துடன் எடிட் செய்யப்பட்ட வைரல் வீடியோ இதோ.!
ப்ளே ஆப் சுற்றில் நுழைந்த சென்னை அணி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ப்ளே ஆப் சுற்றில் நுழைந்த சென்னை அணி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏறக்குறைய ஐபில் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. தற்போதைய நிலவரப்படி நடப்பு சாம்பியான சென்னை அணி தரவரிசையில் 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மும்பை அணி 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
11 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள டெல்லி அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், கைதராபாத் அணி 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிவந்த பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணி தொடர் தோல்வியால் ஐந்து மற்றும் 7வது இடத்தில் உள்ளது.
A look at the Points Table after Match 45 of #VIVOIPL
— IndianPremierLeague (@IPL) April 27, 2019
The @ChennaiIPL becomes the first to qualify for the #VIVOIPL 2019 Playoffs 💪💪 pic.twitter.com/P77wdOxgRR
நேற்றைய ஐபிஎல் 45வது போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் ராஜஸ்தான் 5 வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளி 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இதன் காரணமாக சென்னை அணி பெற்றுள்ள வெற்றியின் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.