இந்திய கிரிக்கெட் வீரர்களை மிஞ்சிய மகளிர் அணி! உலகத்தையே திரும்பி பார்கவைத்து கெத்து காட்டும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

இந்திய கிரிக்கெட் வீரர்களை மிஞ்சிய மகளிர் அணி! உலகத்தையே திரும்பி பார்கவைத்து கெத்து காட்டும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!



indian womens team going to worldcup final


பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, ‘பி’ பிரிவில் டாப்-2 இடத்தை பெற்ற தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலக கோப்பை போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் குரூப் ஏ அணியில் இடம்பெற்றிருந்த இந்திய மகளிர் 4 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இந்தநிலையில் சிட்னியில் இன்று காலை நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. 

அதேபோல் இன்று பிற்பகலில் நடைபெறும் இரண்டாம் அறையிறுதி போட்டியில் 4 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணி லீக் சுற்றில் பி பிரிவில் முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்க அணியுடன் மோதுகிறது.

இந்த நிலையில், சிட்னியில் இன்று  முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோத இருந்த நிலையில், சிட்னியில் கனமழை பெய்ததால், ஆட்டம் டாஸ் போடப்படாமலேயே கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால்,  ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  

உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப்  போட்டிக்கு தகுதி பெறுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.