ஆசிய கோப்பை தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதியாக விளையாடலாம்: ஷாஹீன் அப்ரிடி காயம் குறித்து வக்கார் யூனுஸ் சூசகம்..!

ஆசிய கோப்பை தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதியாக விளையாடலாம்: ஷாஹீன் அப்ரிடி காயம் குறித்து வக்கார் யூனுஸ் சூசகம்..!



Indian batsmen can play comfortably in Asia Cup series

ஆசிய கோப்பை டி-20 தொடரில் இருந்து ஷாஹீன் அப்ரிடி விலகியது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதியை தரும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்டட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்,  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 27 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் வரும் 28 ஆம் தேதி துபாய் மைதானத்தில் மோதுகின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக இந்த போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான் அணியின் துருப்பு சீட்டாக கருதப்படும் ஷாஹீன் அப்ரிடி இந்த தொடரில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, ஷாஹீன் அப்ரிடி விலகலால் இந்திய அணியின் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நிம்மதி என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்  மேலும் கூறியிருப்பதாவது:-

ஷஹீன் அப்ரிடியின் காயம் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நிம்மதியை கொடுக்கும். ஆசிய கோப்பை போட்டியில் அவரைப் பார்க்க முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது. விரைவில் உடல் தகுதி பெறுங்கள் ஷாஹீன்'' என்று அவர் பதிவிட்டுள்ளார். கடந்த டி-20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, கே.எல். ராகுல், ஆகியோரை விரைவில் வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்தவர் ஷாஹீன் அப்ரிடி என்பது குறிப்பிடத்தக்கது.