கடைசி ஓவரின் கடைசி பந்தில் திக்..திக்.! துல்லியமாக வீசிய உம்ரான்.! தொடரை கைப்பற்றிய இந்திய அணி.!

கடைசி ஓவரின் கடைசி பந்தில் திக்..திக்.! துல்லியமாக வீசிய உம்ரான்.! தொடரை கைப்பற்றிய இந்திய அணி.!



india-won-t20-series

இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது T20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதன்படி இந்திய அணியின் சார்பில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 228 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டியது.

இறுதியில் அயர்லாந்து அணிக்கு உம்ரான் வீசிய கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 3 பந்தில் 9 ரன்கள் எடுத்தனர். மீதமிருக்கும் 3 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டன. இறுதியில் அயர்லாந்து அணி வெற்றிபெற கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், உம்ரான் துல்லியமாக வீசியதில் 1 ரன் மட்டுமே எடுக்கமுடிந்தது. அயர்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்தநிலையில் இந்திய அணி 2-0 என T-20 தொடரை கைப்பற்றியது.