ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சொதப்பிய ரோகித்! கடுப்பான ரசிகர்கள்!

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சொதப்பிய ரோகித்! கடுப்பான ரசிகர்கள்!


india-vs-austrelia-t20


இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் களமிறங்குகிறார். மேலும் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டு உமேஷ் யாதவும் விஜய் சங்கருக்கு பதிலாக மயங் மார்க்கண்டேயரும் களமிறங்குகின்றனர்.

india vs austrelia

இந்திய அணியின் துவக்க மட்டையாளர்களாக, ரோகித் சர்மாவும், கேஎல் ராகுலும் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் ரிச்சர்ட்சன் ஆட்டத்ரிக்கு முதல் ஓவரினை சிறப்பாக வீசி 1 ரன் மட்டுமே கொடுத்தார். ஆட்டத்தின் ஆரம்பத்திலே இந்திய அணி தடுமாறியது.

மூன்றாவது ஓவரினை பெக்ரன்டப் வீசினர், அந்த பந்தினை ரோகித் சர்மா சம்பாவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு அவுட் ஆகி வெளியேறினார். தற்போது இந்திய அணி 6 ஓவர் நிறைவுற்ற நிலையில் 50 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை பறிகொடுத்து ஆடிவருகிறது.