ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி.! ஆறுதல் வெற்றியாவது பெறுமா இந்திய அணி?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி.! ஆறுதல் வெற்றியாவது பெறுமா இந்திய அணி?



india playing last one day

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று  நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் கில் களமிறங்கினர். ஷிகர் தவான் 27 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். 

india vs aus

இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி 27 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தநிலையிலும், சுப்மான் கில் 37 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தநிலையிலும் ஆடிவருகின்றனர். இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.