அடுத்தடுத்து அவுட் ஆகும் இந்திய வீரர்கள்.! டஃப் கொடுக்கும் இங்கிலாந்து.! நெருக்கடியில் இந்தியா!

அடுத்தடுத்து அவுட் ஆகும் இந்திய வீரர்கள்.! டஃப் கொடுக்கும் இங்கிலாந்து.! நெருக்கடியில் இந்தியா!


india-losses-six-wickets

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. இதனையடுத்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. இறுதியில் இந்திய அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலையான 241 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து  2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். 

cricket

இதனையடுத்து சுப்மன் கில்லுடன், புஜாரா ஜோடி சேர்ந்து விளையாடி விக்கெட்டை இழக்காமல் விளையாடினர். இதில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் சுப்மன் கில் 15 ரன்களும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது. 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது இந்தியா. 

இந்தநிலையில் இன்றைய ஆட்டத்தில் புஜாரா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சுப்மன் கில் அரை சதமடித்து ஆடிய நிலையில் போல்டாகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய ரஹானேவும் ஆண்டர்ஸன் பந்துவீச்சுக்கு போல்டாகி டக் அவுட்டானார். அடுத்ததாக ரிஷப் பன்ட் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் டக் அவுட் ஆனார். தற்போது களத்தில் விராட் கோலியும், அஸ்வினும் ஆடி வருகின்றனர். இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து போராடி வருகிறது