ஐபிஎல் கோப்பையை தட்டிதூக்கிய குஜராத் டைட்டன்ஸ்.! ஓடிவந்து கட்டிப் பிடித்து கண்ணீர் விட்ட ஹர்திக் பாண்டியா மனைவி.! வைரல் வீடியோ.!

ஐபிஎல் கோப்பையை தட்டிதூக்கிய குஜராத் டைட்டன்ஸ்.! ஓடிவந்து கட்டிப் பிடித்து கண்ணீர் விட்ட ஹர்திக் பாண்டியா மனைவி.! வைரல் வீடியோ.!


harthik wife hugged him

2022 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பிரம்மாண்ட இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

2022 ஐபிஎல் தொடரில் புதிய அணியாக களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி கோப்பையை வென்றது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. நேற்று குஜராத் அணியின் இறுதி போட்டியை பார்ப்பதற்கு ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா வந்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று குஜராத் அணி வெற்றி பெற்றவுடன் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மனைவி நடாஷா கணவரிடம் ஓடி வந்து அவரை கட்டிபிடித்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது அவரது கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. இதையடுத்து அவரை தட்டி கொடுத்து ஆறுதல்படுத்தினார் ஹர்திக். பின்னர் மனைவி கையில் வெற்றி கோப்பையை கொடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.