உலக கோப்பை 2023: இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருக்கப்போவது இவர்தான்; முன்னாள் வீரர் கணிப்பு..!!

உலக கோப்பை 2023: இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருக்கப்போவது இவர்தான்; முன்னாள் வீரர் கணிப்பு..!!



hardik-pandya-will-be-indias-trump-card-in-world-cup-20

உலககோப்பை 2023 தொடரில் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு துருப்பு சீட்டாக இருப்பார் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

உலககோப்பை ஒருநாள் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி துவங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தையாவில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.

அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் மற்றும் இடம் பெறாத வீரர்கள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும், கடந்த 2 ஐ.பி.எல் சீசன்களிலும் ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா தனது அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். மேலும் அவர் இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு துறைகளில் கை கொடுப்பார் என்று நம்புகிறேன்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலககோப்பையை கைப்பற்றிய போது, யுவராஜ் சிங் ஒரு ஆல்ரவுண்டராக இந்திய அணிக்கு துருப்பு சீட்டாக விளங்கினார். அதுபோன்றே ஹர்திக் பாண்டியாவும் ஆல்ரவுண்டராக ஜொலிப்பதுடன் இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு துறைகளில் கை கொடுப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.