தொடரில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்; அசிங்கப்பட்டார் கவாஸ்கர்!!

தொடரில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்; அசிங்கப்பட்டார் கவாஸ்கர்!!



gavaskar got ashamed in asia cup

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கான 14ஆவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடந்த சூப்பர் போர் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்தது தொடரிலிருந்து வெளியேறியது. 

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு கவாஸ்கர் கூறிய கருத்து பொய்யாகி உள்ளது. 

இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றன.

ganguly talks against gavaskar

இந்த தொடர் துவங்குவதற்கு முன்பே இதனை பற்றி கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் "இந்த தொடரில் பாகிஸ்தான் தான் கோப்பையை வெல்லும்" என கூறியிருந்தார். இது இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களின் மனதை புண்படுத்துவது போல் இருந்தது.

கவாஸ்கரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி "இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி சாதிக்க தவறினாலும் இந்த ஆசிய கோப்பையை கண்டிப்பாக வென்றே தீரும்" என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று நடந்த சூப்பர் போர் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்தது தொடரிலிருந்து வெளியேறியது. இதனால் கவாஸ்கரின் கருத்து பொய்யாகிவிட்டது என்று இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.