இரண்டாவது இன்னிங்சில் இந்தியா நிதான ஆட்டம்! போட்டியை வெல்ல அருமையான வாய்ப்பு

இரண்டாவது இன்னிங்சில் இந்தியா நிதான ஆட்டம்! போட்டியை வெல்ல அருமையான வாய்ப்பு


First test 3rd day update

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்தது.  இந்திய அணியின் புஜாரா மட்டும் சிறப்பாக ஆடி 123 ரன்கள் எடுத்தார். 

அதனைத்தொடரந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தார் இஷாந்த் ஷர்மா. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பின்ச் ரன் ஏதும் எடுக்காமல் இஷாந்த் ஷர்மா பந்தில் போல்டானார். 

test match

பின்னர் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய மாரிஸ்,  கவாஜா,  ஷான் மார்ஷ் விக்கெட்டுகளை அஸ்வின் தனது சுழலில் விழவைத்தார். ஆஸ்திரேலியா அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து 59 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. 

test match

மூன்றாவது நாள் ஆட்டம் மழையின் காரணமாக தாமதமாக துவங்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி  235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் ஹெட் மட்டும் அரைசதம் அடித்து அதிகபட்சமாக 72 நாட்கள் எடுத்தார்.

test match

இந்திய அணி சார்பில் பும்ரா மற்றும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா மற்றும் சமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் விஜய் முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்தனர். அதன்பின் விஜய் 18 ரன்களிலும் ராகுல் 44 ரன்களிலும் அவுட் ஆகினர். அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் கோலி நிதானமாக ஆடினர். 

test match

ஆனால் கோலி 34 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய ரஹானே 1 ரன் மற்றும் புஜாரா 40 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து உள்ளது.