அவரு ரொம்ப மோசமா ஆடுறாரு! ப்ளீஸ் ஓய்வு பெற சொல்லுங்க!! முக்கிய வீரர் மீது ரசிகர்கள் கோவம்.!

அவரு ரொம்ப மோசமா ஆடுறாரு! ப்ளீஸ் ஓய்வு பெற சொல்லுங்க!! முக்கிய வீரர் மீது ரசிகர்கள் கோவம்.!



fans angry on pujara

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் 5-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 64 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. அப்போது கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து கடைசி நாளான நேற்றைய ஆட்டத்தில் இவர்கள் இருவர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் விராட் கோலி 13 ரன்களிலும், புஜாரா 15 ரன்களிலும் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஆதிர்ச்சியை கொடுத்தனர். இதனையடுத்து170 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 


இதனையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூஸிலாந்து அணி தட்டிச்சென்றது. இந்த நிலையில் இந்திய வீரர் புஜாராவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்திய டெஸ்ட் அணியில் சீனியர் வீரராக இருந்து வரும் புஜாரா, சிறப்பாக செயல்பட்டு நீண்ட பார்ட்னர்ஷிப் அமைக்கக்கூடியவர். ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இவரது ஆட்டம் மோசமாகவே இருந்தது. இதனால் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.