தோனியை பாத்து கத்துக்கோங்க ஹர்திக் பாண்டியா... ஆத்திரமடையும் ரசிகர்கள்.! என்ன காரணம்.?

தோனியை பாத்து கத்துக்கோங்க ஹர்திக் பாண்டியா... ஆத்திரமடையும் ரசிகர்கள்.! என்ன காரணம்.?


fans adviced harthik pandya

2022 ஐபிஎல் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் கம்பீரமாக முதல் இடத்தில் உள்ளது. ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய பின்னர் குஜராத் அணிக்காக தற்போது கேப்டனாக பங்கேற்று விளையாடி வருகிறார்.

 ஹர்திக் பாண்டியா தலைமையில் அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றிகளை பெற்ற குஜராத் அணி கடைசியாக நடைபெற்ற சன்ரைஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரே ஒரு தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியின் போது முக்கியமான கட்டத்தில் 13வது ஓவரை கேப்டன் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் 2வது மற்றும் 3வது பந்தை எதிர்கொண்ட சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அடுத்தடுத்து சிக்சருக்கு பறக்க விட்டார்.

MS Dhoni

இதன் காரணமாக சற்று கடுப்பாகி இருந்த ஹர்டிக் பண்டியா மைதானத்தில் வீரர்களிடம் வெளிப்படையாக தனது கோபத்தை காண்பித்தார். அதிலும் குறிப்பாக ராகுல் த்ரிப்பாதியை ஆட்டமிழக்க கிடைத்த ஒரு வாய்ப்பை தவறவிட்ட இந்திய அணியின் சீனியர் முகமது ஷமியை மைதானத்தில் கடுமையாக திட்டினார்.

இந்தநிலையில் ஹர்திக் பாண்டியா இவ்வாறு கடுமையாக நடந்து கொண்டது தவறு என்று ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருவதோடு தோனியுடன் ஒப்பிட்டு  ஹர்திக் பாண்டியா சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது இளம் வீரரான முகேஷ் சவுத்ரி இரண்டு எளிதான கேட்சிகளை தவறவிட்டார். ஆனால் தோனி அவரிடம் சென்று நட்பு பாராட்டி அவர் தோள் மீது கைபோட்டு அவரின் மனநிலையை சாதாரணமாக்கி சில அறிவுரைகளை வழங்கினார். எனவே தோனியை பார்த்து  ஹர்திக் பாண்டியா கற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.