கால்பந்து போட்டியின்போது மைதானத்துக்குள் நுழைந்த நாய்.! அட்டகாசம் செய்த நாயை பிடித்த வீரர் செய்த எதிர்பாராத செயல்.!

கால்பந்து போட்டியின்போது மைதானத்துக்குள் நுழைந்த நாய்.! அட்டகாசம் செய்த நாயை பிடித்த வீரர் செய்த எதிர்பாராத செயல்.!


dog in foot ball play ground

பொலிவியா நாட்டில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை இரண்டு அணிகளுக்கு இடையில் போலிவியன் சாக்கர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது போட்டியின் இரண்டாம் பாதி நடைபெற்று கொண்டிருந்தபோது, நாய் ஒன்று திடீரென மைதானத்துக்குள் நுழைந்து கால்பந்து வீரரின் ஒரு  ஷுவை வாயில் கவ்வியபடி ஓடிவந்தது. 

அதைவைத்து சற்று நேரம் புல்வெளியில் புரண்டு விளையாடியது. தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்த விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் சுவாரஸ்யமாக இருந்த நாயின் செயலைப் பார்த்து விளையாடுவதை நிறுத்திவிட்டு, நாயைப் பிடித்து கொஞ்ச ஆரம்பித்தனர்.

அப்போது ஒரு அணியின் வீரர் அந்த நாயை தூக்கி கொஞ்சிவிட்டு, மைதானத்தின் வெளியே கொண்டுசென்று இறக்கிவிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அந்த வீரரின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியதுடன், சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.