சென்னை அணியில் இருந்து முக்கிய வீரர் திடீர் விலகல்.! கடும் அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்.!



csk important player not will play in first match

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ளது. வழக்கம் போல நடப்பு சாமியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது தான் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த ஐபிஎல் சீசனில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.

 இதற்காக சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்தநிலையில், சென்னை  அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ஆல் ரவுண்டர் மொயீன் அலி, முதல் போட்டியில் விளையாட மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் கூறுகையில், மொயீன் அலி திங்கள்கிழமை மும்பை வந்தடைவார் என எதிர்பார்த்தோம், ஆனால் அவருக்கு விசா கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. எனவே மொயீன் அலி எப்போது மும்பை வருவார் என்பது எங்களுக்கே சரியாக தெரியவில்லை.  

ஒருவேளை மொயீன் அலி புதன்கிழமை வந்தாலும் கொரோனா விதிமுறை காரணமாக மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மொய்ன் அலி விளையாட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.