மைதானத்தில் சக வீரரை கோபத்தில் அடிக்க கையை ஓங்கிய நட்சத்திர வீரர்! வெளியான ஷாக் வீடியோ.!

மைதானத்தில் சக வீரரை கோபத்தில் அடிக்க கையை ஓங்கிய நட்சத்திர வீரர்! வெளியான ஷாக் வீடியோ.!



cricket player  try to beat teammate

வங்கதேசத்தில், பங்கபந்து டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான லீக் போட்டி முடிவடைந்த நிலையில், எலிமினேட்டர் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இரண்டு தினங்களுக்கு முன்பு தாக்கா - பரிஷல் அணிகள் மோதியது. அப்போது தாக்கா அணியின் கேப்டன் முஷ்பிகிர் ரஹீம், சக வீரர் ஒருவரை அடிக்க முற்பட்டார்.

அந்த ஆட்டத்தில் பரிஷல் அணியின் அபீப் ஹுசைன் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தார். 17 ஆவது ஓவரின் கடைசிப் பந்தை அபீப் ஹுசைன் தூக்கியடித்தபோது பந்து மேலே சென்றது, அதனை தன்னுடைய கேட்ச் என சொல்லிக்கொண்டே முஷ்பிகிர் ரஹீம் ஓடிவந்துகொண்டிருந்தபோது அந்தப் பந்தை பிடிக்க பீல்டரான நசும் ஓடி வந்து, இருவரும் மோதிக்கொள்வது போல சென்றனர்.

ஆனால் இறுதியாக அந்த கேட்சை முஷ்பிகிர் ரஹீம் பிடித்தார். பந்தை பிடித்தவுடன் நசூமை அடிக்க கையை ஓங்கியபடி பாய்ந்து கோவத்தில் திட்டியுள்ளார். இறுதியில் டாக்கா அணி வெற்றிப்பெற்றது. அந்த போட்டியில் முஷ்பிகிர் ரஹீமின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது. இந்தநிலையில், பிசிசிஐ-யின் விதிமுறைகளை மீறியதன் காரணமாகவும், முஷ்பிகிர் ரஹீம்மிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒழுக்கமற்று நடந்து கொண்ட பதிவிலும் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.