பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது சிறுமி அளித்த பாலியல் புகார்.! அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்.!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது சிறுமி அளித்த பாலியல் புகார்.! அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்.!


complaint on pakistan cricket player

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக விளங்குபவர் யாஷிர் ஷா.  இவர் மிக குறைந்த போட்டிகளில் விரைவாக 50, 100, 200 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் யாஷிர் ஷா மீது இஸ்லாமாபாத்தில் உள்ள ஷாலிமார் காவல் நிலையத்தில் 14 வயது சிறுமி, பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

சிறுமி அளித்துள்ள புகாரில், யாசிர் ஷாவின் நண்பர்  பர்ஹான் என்பவர் என்னை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தார். நடந்த சம்பவத்தை அவர் வீடியோவாகவும் எடுத்து வைத்து என்னை மிரட்டத் தொடங்கினார். பர்ஹான் என்னை மிரட்டுவது குறித்து அவரின் நண்பரான கிரிக்கெட் வீரர் யாசிர் ஷாவுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை ஏளனம் செய்து சிரித்தார். மேலும் தனக்கு சிறு வயது பெண்களை மிகவும் பிடிக்கும் என கூறினார்.

நடந்த சம்பவங்கள் குறித்து உயர் அதிகாரிகள் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. எனக்கு மிகவும் செல்வாக்கான நபர்களின் தொடர்பு இருக்கிறது. உயர் அதிகாரிகளையும் நன்றாக தெரியும். எனவே இது குறித்து புகார் தெரிவித்தால் உன்னுடைய ஆபாச வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என அவரும் என்னை மிரட்டினார்.

யாசிர் அவரின் நண்பர் செய்த இக்கொடூர செயலை மறைத்து அவருக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷாலிமார் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார். இந்தநிலையில், சிறுமி போலீசில் புகார் அளித்த பின்பு, யாசிர் ஷா தன்னை தொடர்பு கொண்டு உனக்கு ஒரு பிளாட் வீடும், அடுத்த 18 ஆண்டுகளுக்கு மாதம் மாதம் பணமும் தருவதாக கூறினார் என சிறுமி புகார் அளித்துள்ளார். கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீதான  சிறுமியின் புகார் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.