முதல் முறையாக கிறிஸ் கெய்ல் இல்லாத ஐபிஎல்.! கடும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்.!

முதல் முறையாக கிறிஸ் கெய்ல் இல்லாத ஐபிஎல்.! கடும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்.!



chris gayle will not play in 2022 ipl

இந்தியாவில் 2022 ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக 590 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் கிறிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட சில முன்னணி வெளிநாட்டு வீரர்கள் விலகியுள்ளனர். இவர்கள் தங்களின் பெயர்களை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்து கொள்ளவில்லை. இதில், அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல்  பங்கேற்காதது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்க்குபெறுமாறு அணி உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டும் தான் பங்குபெறப்போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாராம் கிறிஸ் கெய்ல்.   2009 ஆம் ஆண்டுக்கு பிறகு, கெய்ல் இல்லாமல் நடைபெற போகும் முதல் ஐபிஎல் தொடர் இதுவாகும். இதுவரை ஐபிஎல் தொடரில், கொல்கத்தா, பெங்களூர் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக கெயில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.