யார் என்ன சொன்ன எனக்கென்ன.... நான் இப்படித்தான்.! ஓப்பனாக பேசிய அஸ்வின்.!

யார் என்ன சொன்ன எனக்கென்ன.... நான் இப்படித்தான்.! ஓப்பனாக பேசிய அஸ்வின்.!



aswin talk about negative comments

2022 ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். மொத்தம் 17 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 12 விக்கெட்களை மட்டுமே எடுத்தார். முக்கியமான போட்டிகளில் அஸ்வினின் பந்துவீச்சை எதிரணி வீரர்கள் சிக்ஸர்களாக விளாசினர். இதனால் தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு போனது.

இந்தநிலையில், தன் மீதான விமர்சனங்கள் குறித்து பேசிய அஸ்வின், எனது பவுலிங் குறித்து நான் தரமதிப்பிடு பார்க்கவே கிடையாது. வாழ்கையில் என்றுமே, அப்படி வீசியிருக்கலாம், இப்படி பவுலிங் செய்திருக்கலாம் என சிந்திக்கமாட்டேன். தினந்தோறும் என்ன நடக்கிறதோ அதை ஏற்றுக்கொண்டு செல்வேன்.

மேலும், தென்னாப்பிரிக்க தொடருக்கான வாய்ப்பு போனது குறித்து பேசிய அஸ்வின், எனக்கு இப்போது எதுவுமே தோன்றவில்லை. ஏனென்றால் 5 மாதங்களாக பபுளில் இருந்துவிட்டு வந்துள்ளேன். சுதந்திரமாக வீட்டில் இருக்கிறேன். அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, கிடைத்துள்ள நேரத்தை மகிழ்ச்சியானதாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.