ஐபிஎல் போட்டிகளில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்.! என்ன காரணம் தெரியுமா.?

ஐபிஎல் போட்டிகளில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்.! என்ன காரணம் தெரியுமா.?


aswin out from ipl matches

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தநிலையில், 2021 ஐபிஎல் டி20 தொடரிலிருந்து டெல்லி கேபிடல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான தமிழக வீரர் அஸ்வின்  விலகியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். 

மீண்டும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று சரியானவுடன் மீண்டும் அணியில் இணைந்து கொள்வேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அஸ்வின் குடும்பத்தினர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கடினமான தருணத்தில் அஸிவினுக்கு முழு ஆதரவு அளிப்பதாக டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகமும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் காயம் காரணமாக ஐதராபாத் அணியில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.