வெங்காயம் தக்காளி விற்கலாம் ஆனால் கிரிக்கெட் மட்டும் ஆடக்கூடாதா? சோயிப் அக்தர்!

வெங்காயம் தக்காளி விற்கலாம் ஆனால் கிரிக்கெட் மட்டும் ஆடக்கூடாதா? சோயிப் அக்தர்!



akthar-talk-about-india-pakistan-match

கடந்த 2007ம் ஆண்டு டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடரே நடைபெறாமல் இருக்கிறது. இரு நாடுகளிடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்தநிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட சோயிப் அக்தர் சோயிப் அக்தர் அதில், “இந்தியா – பாகிஸ்தான் இடையே டேவிஸ் கோப்பை விளையாடலாம், கபடி விளையாடலாம். ஆனால் கிரிக்கெட் மட்டும் விளையாடக்கூடாதா? இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினையை கிரிக்கெட்டில் காட்ட வேண்டாம்.

akthar

பாகிஸ்தான் இந்திய வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதம் குறித்து சச்சின், சேவாக் போன்றோரிடம் கேட்டுப் பாருங்கள். இரு நாடுகளுக்கிடையே வெங்காயம், தக்காளி கூட பரிவர்த்தனை ஆகின்றன. கிரிக்கெட் வேண்டாமென்றால் வர்த்தகத்தையும் நிறுத்தி கொள்ள வேண்டியதுதானே.

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மிகவும் அவசியமானது. இரு நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகளால் கிரிக்கெட் பாதிக்கப்படக்கூடாது. இந்தியாவும் பாகிஸ்தானும் விரைவில் இருதரப்பு தொடரை விளையாட முடியும் என்று நம்புகிறோம், இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவது முக்கியம் என சோயிப் அக்தர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.