விராட்கோலியின் புதிய சாதனை! பாகிஸ்தானின் சாகித் அஃபிரிடி என்ன கூறியுள்ளார் தெரியுமா?

விராட்கோலியின் புதிய சாதனை! பாகிஸ்தானின் சாகித் அஃபிரிடி என்ன கூறியுள்ளார் தெரியுமா?



afridi apriciate to virat for new record

 

தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானதால், இரண்டாவது டி20 போட்டி மொஹாலியில் நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 150 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடினார். 

விராட் கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்சரும் 4 பவுண்டரியும் அடங்கும். அத்துடன் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப் பெற்றது. இதன்மூலம் இந்தாண்டு ஒருநாள்,டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் 50க்கும் மேல் சராசரியை பெற்ற வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இந்நிலையில் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “வாழ்த்துகள் விராட் கோலி. நீங்கள் ஒரு சிறப்பான கிரிக்கெட் வீரர். நீங்கள் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்"எனத் தெரிவித்துள்ளார்.