2022 ஐபிஎல் தொடரில் விருதுகளை தட்டிச் சென்ற வீரர்கள்.! யார் யாரென்று பார்த்தீர்களா.!

2022 ஐபிஎல் தொடரில் விருதுகளை தட்டிச் சென்ற வீரர்கள்.! யார் யாரென்று பார்த்தீர்களா.!


2022-ipl-awards

2022 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பிரம்மாண்ட இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

நேற்று போட்டி முடிந்த பிறகு இந்த தொடர் முழுவுதும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்தநிலையில், இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜாஸ் பட்லர் தட்டி சென்றார். இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக அவர் 863 ரன்கள் குவித்துள்ளார்.

அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான ஊதா நிற தொப்பியை ராஜஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் பெற்றார். 17 போட்டிகளில் அவர் 27 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மேலும், இந்த தொடரின் சிறந்த மதிப்புமிக்க வீரர் விருதும் பட்லருக்கு வழங்கப்பட்டது.

இந்த சீசனில் அறத்துடன் விளையாடிய அணிக்கான விருதை ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் பகிர்ந்து கொண்டன. இந்த சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருது பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருது ஐதராபாத் அணியின் உம்ரான் மாலிக்கிற்கு வழங்கப்பட்டது.