காதலிக்கு போன் போட்டு, மாமியாரிடம் டூயட் பாடிய காதலன்.. சிக்கிகொண்ட டோலி.. வைரலாகும் ஆடியோ..!

காதலிக்கு போன் போட்டு, மாமியாரிடம் டூயட் பாடிய காதலன்.. சிக்கிகொண்ட டோலி.. வைரலாகும் ஆடியோ..!


love-man-captured-by-girl-mother

காதல் ஜோடிகள் போடும் கடலைக்கு கடலே பொறுக்காது. ஹலோ என 8 மணிக்கு போனை காதோரம் வைக்கும் ஜோடிகள், நள்ளிரவு சென்றாலும் ஆ., ஆஹான் என பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்படியானவர்களில் சிலர் தங்களின் பெற்றோரிடம் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்ளும் சோகமும் நடைபெறும்.

இந்நிலையில் இணையத்தில் வைரலாகும் வீடியோவில், இளைஞர் தனது காதலியுடன் பேசுவதற்கு அன்பாக போனில் அழைத்து, எடுத்து பாடல் பாடி காதலியை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கலாம் என்று நினைக்கிறார். இதனையடுத்து, அழைப்பு ஏற்கப்பட்டதும் தனது இனிய குரலினால் "உயிரே உயிரே உயிர் நீ தான் என்றால்" என்று பாடுகிறார். 

இளைஞனின் பாடலை கேட்டு அமைதியாக இருந்த பெண்மணி காதலியாக இருக்கும் என்று இளைஞன் நினைக்க, ஹலோ என்று பெண் கூற, இளைஞனும் ஹலோ என்று கூற, தம்பி நான் அவளின் அம்மா பேசுகிறேன் என்று கூறி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் அந்த தாய். இளைஞனோ ஐயையோ மாட்டிக்கிட்டா என்பதை போல பேசி அழைப்பை துண்டிக்கிறார். 

உண்மையை சொல்லுங்க, காதலிக்கு போன் போட்டு சிக்கியது நீங்கதானே.... 😂