அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறி பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு.! வெளியான பகீர் சம்பவம்!!
அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறி பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு.! வெளியான பகீர் சம்பவம்!!
திருவாரூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மனைவி கோமதி, இந்த தம்பதியினருக்கு 7 வயது நிறைந்த நாகஸ்ரீ, 3 வயது நிறைந்த நவிஸ்ரீ என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செல்வம் மற்றும் கோமதி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இவ்வாறு சமீபத்திலும் அவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கோமதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய கோமதி தற்கொலை செய்து கொள்ள அருகிலிருந்த தண்டவாள பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது அப்பகுதியில் சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
அப்பொழுது அதன் முன் கோமதி தனது 3 வயது குழந்தையுடன் பாய்ந்துள்ளார். அப்பொழுது ரயிலில் மோதி படுகாயமடைந்த கோமதி மற்றும் குழந்தை இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.