ஆண்களும் வயதுக்கு வருவார்களா? உறுதி செய்வது இப்படித்தானா?.. ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இதோ.!
ஆண்களும் வயதுக்கு வருவார்களா? உறுதி செய்வது இப்படித்தானா?.. ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இதோ.!
மனிதனின் வளர்ச்சி, உடல் இயக்கம் தொடர்பாக பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பெண்களை பொறுத்த வரையில் அவர்களின் பிறப்புறுப்பு வழியே இரத்தம் வெளியேறி, மாதவிடாய் சுழற்சி தொடங்குவது அவர்களின் வயதுக்கு வருதல் என்ற பூப்படைதல் / பருவமடைதல் நிகழ்வை உறுதி செய்கிறது.
ஆண்கள் எப்படி வயதுக்கு வருவார்கள்? அதனை உணர்த்துவது எப்படி? என்ற விஷயம் பலரால் அறியப்படாமல் இருக்கிறது. பொதுவாக ஆண்கள் 13 வயதில் இருந்து 14 வயதுக்குள் தங்களின் பருவத்தை எட்டுகின்றனர். இந்த வயதில் தான் இரண்டாம் பருவ மாற்றமும் நிகழ்கிறது.
ஆணின் குரலில் மாற்றம், தொண்டை குழல் வெளியே வருவது, முகத்தில் உரோமம் வளர்வது, முகப்பரு போன்றவை மூலமாக இதனை அறியலாம். மேலும், இந்த தருணத்தில் உளவியல் ரீதியான மாற்றமும் ஏற்படும். பெற்றோரிடம் இருந்து ஒதுங்கி இருப்பது, அவ்வப்போது ஏற்படும் கோபம், சோகம், மகிழ்ச்சி என்ற உணர்வுகள் மாற்றம் போன்றவையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், பிறர் தன்னை கவனிக்க வேண்டும் என நினைத்தல், அதற்கேற்றவாறு உடைகள் அணிதல், தனக்கென தனியிடத்தை ஒதுக்கிக்கொள்ளுதல் போன்றவையும் ஆண்கள் வயதுக்கு வந்ததற்கான அறிகுறி ஆகும். இந்த சமயங்களில் தந்தை தனது மகனிடம் நண்பராக பழகி வாழ்க்கையின் புரிதலை ஏற்படுத்த வேண்டும்.