பரந்தூர் விமான நிலைய விவகாரம்... மு.க ஸ்டாலினை விமர்சித்த த.வா.க தலைவர் வேல்முருகன்..! இப்படி செய்யலாமா?..!!



velmurugan-trolled-about-stalin

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க தேவையான முதற்கட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதனால் நிலம் அளவீடு செய்யும் பணிகள், அது சார்ந்த அதிகாரிகளுக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டமும் அங்கு நடக்கிறது, பல்வேறு அரசியல் கட்சியினரும் மக்களை சந்திக்கிறார்கள். 

மக்களின் அனுமதி இன்றி தமிழ்நாடு அரசு எவ்வித நடவடிக்கையும் பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் எடுக்காது என அறிவித்தாலும், திரைமறைவில் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக விமான நிலையத்திற்கான பணிகள் நடைபெறுகின்றன என களஆய்வு செய்யும் அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன.

dmk

இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக பேசுகையில், "மத்திய அரசு தங்களை நிர்பந்திக்கிறது என அவர்களுக்கு தமிழ்நாடு அரசு துணைபோக கூடாது. இது அதிமுகவிற்கும் - திமுகவிற்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும். 

முதலமைச்சர் ஸ்டாலின் பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கொண்டு இருப்பதாக தெரியவருகிறது. அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற இயலாமல் தவறி வருகிறார். திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று பேசினார்.