திருவாரூரில் தி.மு.க சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? வந்தது விருப்பமனு!.

திருவாரூரில் தி.மு.க சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? வந்தது விருப்பமனு!.



udhayanithi in thiruvarur by election


தமிழகத்தில் பலம் வாய்ந்த அரசியல் தலைவராக இருந்து வந்த கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவையடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

 முன்னாள் முதலர்வர் கருணாநிதியின் தொகுதி என்பதால் பல்வேறு கட்சிகளும் தன் வசம் அந்த தொகுதியை இழுக்க முயற்சித்து வருகின்றனர்.

thiruvarur

தி.மு.க சார்பில் அந்த தொகுதியில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பதற்கான விருப்ப மனு  இன்று மாலை 6 மணி வரை திமுக தலைமை அலுவலகத்தில் அளிக்கலாம் என தலைமை தெரிவித்தது. 

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு அளித்த அறிவிப்பில், திருவாரூர் தொகுதியில் போட்டியிட எனது பெயரில் யாரும் விருப்ப மனு அளிக்க வேண்டா''ம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில்,மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட 2 விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.