#LokSabha2024 | "உதயநிதியுடன் எடுத்த புகைப்படமே சாட்சி, விரைவில்.."! தேர்தல் பிரச்சாரத்தில் இபிஎஸ் உறுதி.!!

#LokSabha2024 | "உதயநிதியுடன் எடுத்த புகைப்படமே சாட்சி, விரைவில்.."! தேர்தல் பிரச்சாரத்தில் இபிஎஸ் உறுதி.!!



udayanidhi-stalin-will-be-arrested-soon-eps-confident

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. வாக்குப்பதிவிற்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜகவை விட்டு வெளியேறி அதிமுக இந்த தேர்தலை கூட்டணி கட்சிகளுடன் எதிர்கொள்கிறது.

தனது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசாவை எதிர்த்துப் போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவிலேயே சிறைக்குச் செல்வார் என அடித்து கூறினார்.

politicsஇது தொடர்பாக தனது பிரச்சாரத்தில் பேசிய அவர் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை மற்றும் புழக்கம் அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தின் மாணவர்களும் இளைஞர்களும் போதைப் பொருட்களுக்கு பெருமளவில் அடிமையாகி வருகின்றனர். திமுக கட்சியின் நிர்வாகிகளே போதை பொருட்களை விற்பனை செய்கின்றனர். சமீபத்தில் கூட அந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

politicsஅந்த நபர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினுக்கும் போதை பொருள் கடத்தியவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதன் காரணமாக அவர் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே கைது செய்யப்படுவார். அவர் கம்பி என்னும் காலம் வெகு தொலைவில் இல்லை.போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது பிரச்சாரத்தில் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.