பிரதமர் மோடி 3வது முடியாத அரியணை ஏறுவார் - அமமுக டிடிவி தினகரன்!

பிரதமர் மோடி 3வது முடியாத அரியணை ஏறுவார் - அமமுக டிடிவி தினகரன்!



TTV dinakaran speech about PM Modi

வரும் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்த நிலையில், அக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் இருக்கும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

pm modi

இதுகுறித்து அவர் பேசியதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி ஒருங்கிணைந்து செயல்பட்டு அவர்களின் வெற்றியை உறுதி செய்கிற வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகளையும், உடன்பிறப்புகளையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

pm modi

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி அவர்களை மூன்றாவது முறையாக அரியணையில் ஏற்றுவதோடு, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் அமையட்டும் என அவர் கூறியுள்ளார்.