அண்ணே! நீங்கதான் அடுத்த பிரதமர்! நம்பிக்கையுடன் பேசிய துரைமுருகன்!

அண்ணே! நீங்கதான் அடுத்த பிரதமர்! நம்பிக்கையுடன் பேசிய துரைமுருகன்!



Rahul gandhi is the next prime minister thuraimurugan speech

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்க்ளின் சிலை திறப்பு விழாப் பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தியாவில் இருந்து பெரும்பாலான கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக சோனியா காந்தி சிலை திரிபு விழாவில் கலந்துகொண்டு கலைஞர் அவர்களின் சிலையை திறந்து வைத்தார். இந்நிலையில் சென்னைக்கு வந்தாலே புதிய பதவிகள் தேடி வரும். அடுத்த பிரதமராக அமரப் போகிறார் ராகுல்காந்தி என்று துரைமுருகன் பேசினார்.

stalin

இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:

திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் அப்போதிருந்தே ஒரு தொடர்பு உண்டு. கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தது எங்களுக்குப் பெருமை. ஆளும் மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார் சோனியா காந்தி.

மேலும் எதிரிகள் வகுக்கும் திட்டங்களை வீழ்த்தி தன்னிகரில்லா தலைவராக இருந்து வருகிறார் மு.க.ஸ்டாலின் என்றும் சென்னைக்கு வந்தாலே புதிய பதவிகள் தேடிவரும். ராகுல் காந்தி அப்படியொரு பதவியைப் பெறுவார். அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என்று துரைமுருகன் பேசியுள்ளார்.