நிதி மோசடியில் ஈடுபட்டதால் ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்...! ஆப்படித்த அதிகாரிகள்..!

நிதி மோசடியில் ஈடுபட்டதால் ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்...! ஆப்படித்த அதிகாரிகள்..!



panchayat-leader-fired-for-financial-fraud

மதுரை மாவட்டம் கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா ஜி.மோகன் நிதி முறைகேடு புகாரின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2019 நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவரானார் ஷர்மிளா. ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்ற பின் ஊராட்சி நிதியை தன்னுடைய வங்கி கணக்குக்கு மாற்றி முறைகேடு செய்ததாக குற்றசாட்டு கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில், ரூ.10 லட்சத்து 44 ஆயிரம் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. நிதி, நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்ட புகாரில் தேவையான விளக்கம் அளிக்கவில்லை. 

இதன் காரணமாக கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா ஜி.மோகனை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது