எங்க ஓட்டு உங்களுக்கு தான்யா!! நீ தைரியமா போயா!! கதிர் ஆனந்தை மெய்சிலிற்கவைத்த பாட்டி..

எங்க ஓட்டு உங்களுக்கு தான்யா!! நீ தைரியமா போயா!! கதிர் ஆனந்தை மெய்சிலிற்கவைத்த பாட்டி..



old-women-promise-to-kathir-anand-viral-video

எங்க ஓட்டு உங்களுக்குத்தான்யா என திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திடம் கூறிய பாட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்துவருகிறது. திமுக, அதிமுக, பாஜக என தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது.

Kathir Anand

இதனால் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈட்டுபட்டுவருகின்றனர். இந்நிலையில், வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்கள் நேற்று தனது தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூதாட்டி ஒருவர், கதிர் ஆனந்தை வாழ்த்தியதோடு, எங்க ஓட்டு உங்களுக்கு தான்.. நீ தைரியமா போய்யா என கூறிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Kathir Anand

கடந்த முறை மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற கதிர் ஆனந்த் அவர்கள் வேலூர் தொகுதியில் சத்துவாச்சாரி பகுதியில் சுரங்கப்பாதை, கே.வி குப்பம் சுங்கச்சாவடி அகற்றல், வாணியம்பாடி மேட்டுப்பாளையம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அமைத்துக்கொடுத்ததற்கான பணியை தொடங்கி வைத்தல், மக்களுக்கான மருத்துவ முகாம்கள், அரசின் திட்டங்களை அறிந்துகொள்ளும் விழிப்புணர்வுகள் என பல்வேறு பணிகளை செய்துகொடுத்ததை அடுத்து அவருக்கு தற்போதும் அந்த பகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. இதனால் இந்தமுறையும் அவரே வேலூர் தொகுதியில் வெற்றிபெறுவார் என கூறப்படுகிறது.