திராவிட மாடல் குறித்து திமுக தலைவருடன் விவாதிக்க "நாங்க ரெடி..!! நீங்க ரெடியா..?"; பாஜக தலைவர் அண்ணாமலை..!!

திராவிட மாடல் குறித்து திமுக தலைவருடன் விவாதிக்க "நாங்க ரெடி..!! நீங்க ரெடியா..?"; பாஜக தலைவர் அண்ணாமலை..!!



nanga-redi-ninge-redia-to-discuss-dravidian-model-with

தமிழ் மாடலா, திராவிட மாடலா, என்பது பற்றி விவாதிக்க பாரதிய ஜனதா கட்சி எப்போதும் தயாராக உள்ளது என்று திண்டிவனத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். 

திண்டிவனம் அருகே இருக்கும் கூட்டேரிப்பட்டில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது:- 

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தமிழகத்தில் புவியியல் ஆர்வலர்கள், என்.ஜி.ஓ.க்கள் என பல்வேறு அமைப்பினர் எதிர்த்து வந்தனர். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த என்.ஜி.ஓக்கள் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் சத்தமில்லாமல் அமைதியாக உள்ளனர். 

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இந்தியாவில் காப்பரின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 40 சதவீதம் காப்பர் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த இந்தியா தற்போது சீனாவிடம் இருந்து காப்பர் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. 

காப்பர் விலை ஏற்றத்தால் அதை சார்ந்த பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீ்சி இருப்பதோடு, பாஐகவினரின் பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளனர். ஆனால் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களை நாங்கள் அமைதியாக இருக்கும்படி சொல்லி இருக்கிறோம்.

தமிழ் மாடலா, திராவிட மாடலா என்பதை விவாதிக்க பாரதிய ஜனதா கட்சி எப்போதும் தயாராக உள்ளது. 70 வருடங்களில் தி.மு.க.வின் சாதனை திராவிட மாடல் என்று கூறுகின்றனர். அதையும் விவாதிக்க தயாராக உள்ளோம். அமைச்சர் பொன்முடி நேரத்தையும், காலத்தையும் குறித்து சொன்னால் பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் ஒருவர் அவருடன் விவாதிக்க வருவார். 

அதே போல தி.மு.க. தலைவர் எப்போது தயார் என்று சொன்னாலும் அவர் குறிப்பிடும் இடத்துக்கு பொன்முடி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல நான் வருகிறேன். இவை அனைத்தையும் நேரலையில் மக்கள் பார்க்க வேண்டும். நாங்கள் தயாராக இருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.