திமுகவில் இருந்து நிறைய பேர் வெளியே வருவார்கள்! எம்.எல்.ஏ கு.க.செல்வம்

திமுகவில் இருந்து நிறைய பேர் வெளியே வருவார்கள்! எம்.எல்.ஏ கு.க.செல்வம்


MLA KK selvam talk about DMK

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்ததால் திமுகவின் முக்கியமான பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார். திமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படும் முன்னர் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அவரது விளக்கம் திருப்திகரமானதாக இல்லை என திமுக கு.க.செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது.

சமீபத்தில் கு.க.செல்வம் பாஜக சென்னை அலுவலகம் சென்று வந்ததால் அடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து கு.க.செல்வம். தான் எந்த கட்சியிலும் இனி இணைய போவதில்லை என்றும், கட்சி சாரா எம்.எல்.ஏவாக தனது பணியை தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

dmk

இந்தநிலையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் நான் போட்டியிட்டாலும் வெற்றி பெறும் வாய்ப்பு எனக்கு உள்ளது.  யார் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறார்களோ அவர்கள் கட்சி சார்பில் போட்டியிடுவேன். திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது.  திமுகவில் இருந்து நிறைய பேர் வெளியே வருவார்கள் என கூறினார்.