மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ‘பாடும் நிலா'.! மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும்! மு.க ஸ்டாலின்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ‘பாடும் நிலா'.! மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும்! மு.க ஸ்டாலின்

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல் களை பாடியவர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவருக்கு வயது 74. பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் எஸ்பிபி அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தி பரவியது. இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.அதனைத்தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலை சீராக உள்ளது. மயக்கத்திலிருந்து மீண்டுள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
#Covid19 காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ‘பாடும் நிலா’ #SPBalasubramanyam உடல் நலம் தேறி வருகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) August 17, 2020
இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த SPB அவர்கள் விரைந்து முழு உடல்நலன் பெற்று மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும்!
இந்தநிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரது டுவிட்டர் பக்கத்தில், "#Covid19 காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ‘பாடும் நிலா’ #SPBalasubramanyam உடல் நலம் தேறி வருகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த SPB அவர்கள் விரைந்து முழு உடல்நலன் பெற்று மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும்! என தெரிவித்துள்ளார்.