#LokSabha | "நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிகு இந்து.." சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்கனா ரனாவத்.!!

#LokSabha | "நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிகு இந்து.." சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்கனா ரனாவத்.!!



im-a-proud-hindu-i-wont-eat-beef-kangana-ranaut-ends-co

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முடிவடைய இருக்கிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த பொது தேர்தலில் 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பாலிவுட் சினிமாவின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வலது சாரி ஆதரவாளரான கங்கனா ரனாவத் பாஜக சார்பாக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.

politics2019 ஆம் ஆண்டு இவர் மாட்டுக்கறி சாப்பிடுவது தவறு இல்லை என்ற பதிவு தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தின் மூலம் பதிலளித்திருக்கிறார் கங்கனா ரணாவத். இது தொடர்பாக பதிவு செய்துள்ள அவர் தான் மாத்திரை சூட் போட எந்த இறைச்சியும் சாப்பிடுவதில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் நான் ஒரு பெருமை மிகு ஹிந்து எனவும் அவர் பதிவிட்டு இருக்கிறார். மேலும் வேண்டுமென்றே தன் மீது வதந்தி பரப்பவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் எனக்கூறி இவர் சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.