தி.மு.க தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவது முதல்வர் கூறிய திராவிட மாடல்: எடப்பாடி கிண்டல்..!

தி.மு.க தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவது முதல்வர் கூறிய திராவிட மாடல்: எடப்பாடி கிண்டல்..!


DMK leaders leaving the party is the Dravidian model said by the Chief Minister

தி.மு.கவில் இருந்து அதன் தலைவர்கள் ஒவ்வொருவராக விலகுவது தான், திராவிட மாடல் ஆட்சி என அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நேற்று டெல்லியில் உள்தூறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக தெரிவித்தார்.

குறிப்பாக, தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியும் நிலை உள்ளதால் இதனை உடனே தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், தி.மு.கவில் இருந்து அதன் தலைவர்கள் ஒவ்வொருவராக விலகுவது, இந்த 16 மாத கால ஆட்சியின் சாதனை. ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகுவது தான் திராவிட மாடல் என்று கூறியுள்ளார்.