குஜராத் முதல்வர் ராஜினாமா!.. அசுர பலத்தில் வெற்றி பெற்று 7 வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பா.ஜனதா..!

குஜராத் முதல்வர் ராஜினாமா!.. அசுர பலத்தில் வெற்றி பெற்று 7 வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பா.ஜனதா..!


BJP has won power for the 7th time

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜனதா கட்சி மீண்டும் அசுர பலத்துடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் வழங்கினார். குஜராத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்காக, காந்திநகரில் இருக்கும் ராஜ்பவனுக்கு வந்து ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

ராஜினாமா செய்துள்ள பூபேந்திர படேல் வரும் 12 ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்க இருக்கிறார். குஜராத் சட்டசபை தேர்தலின் வாக்கு பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. 182 இடங்களில் 156 இடங்களில் பா.ஜனதா மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 

மேலும் பா.ஜனதா கட்சி, குஜராத் தேர்தலில் 156 இடங்களில் இமாலய வெற்றிபெற்றது. காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் மட்டும் வெற்றிபெற்று பெரும் பின்னடைவை அடைந்துள்ளது. புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி ஐந்து இடங்களையும், சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்தையும், சுயேச்சை மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.