சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணன் அருள் பற்றி யாரும் அறியாத பல உண்மைகள்!

சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணன் அருள் பற்றி யாரும் அறியாத பல உண்மைகள்!



unknown-trues-of-saravana-stores-and-history-of-saravan

தற்போது சென்னையில் மிகப்பெரிய அங்கமாக விளங்குவது சரவணா ஸ்டோர்ஸ். இதன் ஒருநாள் வியாபாரம் மட்டும் பலகோடி. இத்தகைய பிரமாண்ட சரவணா ஸ்டோர்ஸ் ஒரே நாளிலோ அல்லது அதிகப்பணத்தை கொண்டோ ஆரம்பிக்கப்பட்டது இல்லை. மூன்று சகோதரர்களின் கடின உழைப்பால் இன்று உயர்ந்து நிற்கிறது இந்த பிரமாண்டம்.

ஆம், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு மூன்று மகன்கள். செல்வரத்தினம், யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம். இவர்கள்தான் இந்த பிரமாண்ட சரவணாவின் தூண்கள். இந்த மூன்று சகோதரர்களில் முதலில் சென்னை வந்தவர் சரவணனின் கடைக்குட்டி செல்வரெத்தினம்தான். தனது வியாபாரம் வெற்றிபெரும்நிலையில் தனது சகோதரர்களையும் உடன் சேர்த்துக் கொண்டார் செல்வரத்தினம் அவர்கள்.

Saravana stores

காபி:

சரவணா ஸ்டோர்ஸினின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக இருப்பது செல்வரத்தினம் விற்ற காப்பிதான். ஆம், சென்னை வந்த புதிதில் செல்வரத்தினம் அவர்கள் காப்பிதான் விற்றார். பின்னர் அதில் கிடைத்த சிறு தொகையை வைத்து சிறிதாக ஒரு கடை தொடங்கி மெல்ல, மெல்ல தொழில் வெற்றி கண்டார் செல்வரத்தினம் அவர்கள்.

ஒற்றுமை:

அண்ணாச்சி செல்வரத்தினம் தனது தொழில் வெற்றியடைந்ததும் முதலில் அவர் செய்த காரியம் தனது சகோதர்களையும், குடும்பத்தையும் சென்னைக்கே வரவழைத்து தனுடனையே வைத்துக்கொண்டார். பின்னர் சோகோதர்கள் மூவரும் ஒன்றுசேர்ந்து 
துணிக்கடை, நகைக்கடை, எலக்ட்ரானிக்ஸ் என எல்லா தொழிலும் வெற்றிக் கண்டனர்.

பிரிவு:
பக்கவாதம் காரணத்தால் செல்வரத்தினம் அவர்கள் மரணமடைந்தார். செல்வரெத்தினத்தின் இறப்புக்கு பிறகு ஒற்றுமையாக இருந்தவர்கள்  பிரிய தொடங்கினார்கள். யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம் அவர்களுடைய பிள்ளைகள் நடத்துவது தான் சரவணா ஸ்டோர்ஸ்.

Saravana stores

சரவணா அருள்:

செல்வரத்தினம் பெற்றெடுத்த செல்வம்தான் அவருடைய மகன் சரவணன் அருள். அதாவது லெஜெண்ட் சரவணா. இவர் தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடிப்பது பற்றி பல கருத்துகள் எழுந்து வருகின்றனர். முதலில் தமன்னா, ஹன்சிகாவுடன் நடித்ததற்கு பலரும் இவரை கேலி, கிண்டல் செய்தனர். பின்னர் குழந்தைகளை வைத்து சம்மர் ஆபர், தற்போது விஜய் தொலைக்காட்சி பிரபலங்களை வைத்து தீபாவளி  ஆபர் என கலக்கிக்கொண்டிருக்கிறார்.

Saravana stores

இவருக்கு திருமணாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருக்கு திருமணமும் முடிந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வேல் ஒன்றை காணிக்கை செலுத்தி வந்தார் சரவணன் அருள்.

சரவணா அருளின் வளர்ச்சியும், புகழும் நாளுக்குநாள் அதிகரிக்க இவர் சினிமாவில் நடிக்க போகிறார் என்றும், நயன்தாராதான் ஜோடி என்றும்கூட சில வதந்திகள் வெளிவந்தன. ஆனால் அவை அனைத்தும் பொய் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சரவணா அருள். இவரின் வளர்ச்சியும், புகழும் மேலும் அதிகரிக்க நமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.