அந்தரங்க விசயங்களை ரகசியமாக வைத்துக்கொள்வதில் இந்திய பெண்கள் எவ்வளவு கில்லாடி தெரியுமா..?
அந்தரங்க விசயங்களை ரகசியமாக வைத்துக்கொள்வதில் இந்திய பெண்கள் எவ்வளவு கில்லாடி தெரியுமா..?
இந்தியாவில் பொதுவாக பெண்கள் ஏதாவது பிரச்சனை என்று வரும் போது ஊரையே கூட்டும் அளவிற்கு கூப்பாடு போட்டு சண்டை போடும் வல்லமை பெற்றவர்கள். ஆனால் அதே சமயத்தில் தங்களது அந்தரங்க விஷயங்களைப் பற்றி தனது தோழிகளிடம் கூட பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் கூச்சம் அடைவார்கள்.
உதாரணமாக குழாயடி சண்டையில் ஒட்டு மொத்த குடும்பத்தையும் தெருவிற்கு இழுக்கும் அளவிற்கு திட்டித் தீர்க்கும் பெண்கள் கடையில் நாப்கின் கேட்டு வாங்க கூச்சப்படுவார்கள். இந்தியப் பெண்களின் வாழ்க்கை சற்று முரண்பாடுதான். காரணம் வளர்ந்த விதம் மற்றும் சமூக ஒடுக்குமுறை.
உறவின் ரகசியம்:
பொதுவாக ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது காதல், அக்கறை, அரவணைப்பு, மரியாதை. ஆனால், அவர்களை இச்சை, உறவு, தாம்பத்தியம், கொஞ்சி, குலவுதல் போன்றவற்றுக்கு காதல் என்ற பெயரில் பயன்படுத்திக் கொள்ளும் கூட்டம் தான் அதிகம். இவ்வாறு காதல் என்ற பெயரில் தாங்கள் ஏமாற்றப்படுவதை,பெண்கள் அதிகம் வெளியே கூறுவதில்லை.
அந்தரங்க வீடியோக்கள்:
ஆண்கள் மட்டும் தான் அந்த மாதிரியான வீடியோக்களை பார்ப்பார்கள் என்று நினைத்தால் அது தவறு. ஆண்கள் சில சமயங்களில் இதை போன்ற அனுபவங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வர். ஆனால் உலகிலேயே பார்ன் பார்க்கும் பெண்கள் பட்டியலில் இந்திய பெண்கள் இரண்டாம் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தாங்கள் அவ்வாறு பார்ப்பதை மிகவும் இரகசியமாக வைத்துக் கொள்கிறார்கள் பெண்கள்.
சினிமாவிற்கு செல்லுதல்:
ஒரு ஆண் தன் நண்பர்களுடன் சினிமாவிற்கு சென்று வருகிறேன் என்று வீட்டில் கூறுவது இயல்பு. அதுவே மகள் கூறினால் அவ்வளவு தான். இதனால் சினிமாவிற்கு செல்வதில் இருந்து, பிறந்தநாள் பார்ட்டி, தோழிகளுடன் வெளியே செல்வது என எதுவாக இருந்தாலும் மூட்டை, மூட்டையாக பொய்களை கொட்டி விடுகிறார்கள் இந்திய பெண்கள்.
கடவுச்சொல்:
எழுத்து, குறியீடு, எண்கள் என அனைத்தையும் கலந்து ஒரு ஸ்ட்ராங்கான கடவு சொல் வைப்பதில் வல்லவர்கள் பெண்கள். பெண்களின் மொபைலை அன்லாக் செய்வது கடினம்.