ஆஹா!! நமக்கும் இப்படி ஒரு காதலி இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்!!
ஆஹா!! நமக்கும் இப்படி ஒரு காதலி இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்!!
நமது நாட்டில் நாம் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்து விட்டாள், நாம் வேறொரு பெண்ணை பார்த்தால் போதும், அவர்களுக்கு கோபம் தலைக்கு ஏறிவிடும். அதையும் தாண்டி நாம் ஒரு பெண்ணிடம் பேசுவதை நம் காதலி பார்த்து விட்டால் நம் காதல் முறிந்து விடும் அளவிற்கு பெரிய ஆபத்து வந்துவிடும்.
ஆனால் அமெரிக்காவில் ஒரு டாக்டரின் காதலி தன் காதலனுக்காக அவரே பல பெண்களை அறிமுகப்படுத்தி அவர்களோடு உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரால் டாக்டர் மற்றும் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் நியூபோர்ட் பீச் நகரை சேர்ந்தவர் கிரேன்ட் வில்லியம் ரோபிசியஸ் (38). இவர் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது காதலி பெயர் செரிசா லாரா ரிலே (31).
ரோபிசியஸ்க்கு பெண்களை போதை பொருளுக்கு அடிமையாகி அவர்களுடன் உல்லாசமாக இருப்பது மிகவும் பிடிக்கும். தன் காதலனின் ஆசையை நிறைவேற்றுவதில் அவருடைய காதலி மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் பார்களுக்கு சென்று பெண்களிடம் மயக்கும் வண்ணம் பேசியுள்ளனர். பின்னர் அவர்களுக்கு போதை மருந்துகளை கொடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவர்களுடன் நெருங்கி பழகியபின் தங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வரும்படி அழைத்து மீண்டும் போதைப் பொருள் கொடுத்து தன் காதலனுடன் உல்லாசமாக இருக்க உதவியுள்ளார் அந்த காதலி ரிலே.
இவ்வாறு பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் அவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் ரோபிசியஸ் மற்றும் ரிலேவை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின்போது ரோபிசியஸ்ன் செல்போனை சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது செல்போனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்துள்ளன. அந்த வீடியோக்களில் பெண்கள் மயக்க நிலையில் இருந்த வண்ணமே தோன்றுகின்றது. இதனால் பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து அவர்களை மயக்க நிலைக்கு போக வைத்து அவருடன் உல்லாசமாக இருந்தது உறுதியாகியுள்ளது.
பின்னர் ரோபிசியசால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வந்து புகார் செய்யலாம், அவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் அறிவித்தனர். அதையடுத்து100-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்தது போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.