மூட்டு வலியை உடனடியாக சரி செய்ய நல்லெண்ணையை இப்படி பயன்படுத்தி பாருங்க.!?

மூட்டு வலியை உடனடியாக சரி செய்ய நல்லெண்ணையை இப்படி பயன்படுத்தி பாருங்க.!?



How to use sesame oil to cure knee pain

தற்போதுள்ள நவீன காலத்தில் உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை என அன்றாட பழக்க வழக்கங்கள் பல மாறிவிட்டன. இவ்வாறு ஊட்டச்சத்துக்கள் தேவையான அளவு கிடைக்காமல் பல வகையான நோய்கள் பாதிக்கின்றன. ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டதன் மூலம் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தனர்.

Oil

தற்போதுள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாதாரணமாக மூட்டு வலி பாதிப்பு ஏற்படுகிறது. வயதான பின்பு ஏற்படும் மூட்டு வலி இளைய தலைமுறையினருக்கு அதிகம் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருந்து வருவது உணவு பழக்க வழக்கங்கள் தான். இந்த மூட்டு வலியை மாத்திரைகள் இன்றி எளிதாக நல்லெண்ணெய் பயன்படுத்தி சரி செய்யலாம். எப்படி என்பதை குறித்து பதிவில் பார்க்கலாம்?

Oil

முதலில் ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து கொள்ளவும். பின்பு அதில் கற்பூரம் போட்டு கரைந்ததும், சிறிது நேரம் ஆற வைக்கவும். மிதமான சூட்டுடன் எடுத்து வலியுள்ள இடங்களில் தடவி வந்தால் உடலில் ஏற்படும் அனைத்து வகையான வலிகளும் உடனடியாக குணமாகும்.