ஆரோக்கியமான சுவையான கார உப்பு உருண்டை.. வீட்டிலேயே அசத்தலாக செய்வது எப்படி?..!!

ஆரோக்கியமான சுவையான கார உப்பு உருண்டை.. வீட்டிலேயே அசத்தலாக செய்வது எப்படி?..!!



How to prepare uppu Kara urundai

ஆரோக்கியமான சுவையான ஸ்னாக்ஸ்-ஐ வீட்டிலேயே எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - தேவைக்கு ஏற்ப 

உப்பு - தேவைக்கேற்ப 

அரிசி மாவு - ஒரு கப் 

கடுகு - கால் தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3 

பச்சை மிளகாய் - 2 

கறிவேப்பிலை - ஒரு கொத்து

தேங்காய் துருவல் - 5 தேக்கரண்டி

வெங்காயம் - ஒன்று

health care

செய்முறை :

★முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசிமாவை சேர்த்து அதனுடன் உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

★பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

★அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இவற்றுடன் அரிசிமாவை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

★சூடாக இருக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக மாவில் ஊற்றி கிளறி நன்றாக மாவு வெந்து வந்தபின் உருண்டையாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

★பின் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

★இறுதியாக இட்லிதட்டில் ஒரு காட்டன் துணியை விரித்து அதன்மேல் இந்த உருண்டைகளை வைத்து இட்லி பானையில் 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

★அவ்வளவுதான் மிருதுவான ஆரோக்கியம் மிகுந்த கார உப்பு உருண்டை தயாராகிவிடும்.