நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான சேமியா மசாலா பொங்கல்.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!!

நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான சேமியா மசாலா பொங்கல்.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!!



How to prepare masala semiya pongal

சேமியாவில் ருசியான பொங்கல் செய்வது எப்படி என்று தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் :

சேமியா - இரண்டு கப்

பாசிப்பருப்பு -அரை கப்

நெய் - மூன்று தேக்கரண்டி

மஞ்சள் - கால் தேக்கரண்டி

தண்ணீர் - 6 கப்

உப்பு - தேவைக்கு ஏற்ப

முந்திரி - 20

காய்ந்த மிளகாய் - 4

மிளகு - இரண்டு தேக்கரண்டி

ஏலக்காய், லவங்கம், பட்டை - தேவைக்கேற்ப

தனியா - ஒரு தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

செய்முறை :

★முதலில் சேமியாவுடன் பாசிப்பருப்பை வெறும் கடாயில் தனித்தனியே வாசனை வரும் வரை வறுத்து தண்ணீர் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நான்கு விசிலுக்கு வேக விட வேண்டும்.

★பின் காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை லேசாக வறுத்து பொடித்துக்கொள்ளவும்.

★ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மீதமுள்ள மசாலா பொருட்களை சேர்த்து முந்திரி சேர்த்து கிளற வேண்டும்.

★அடுத்து வேகவைத்த சேமியாவில் உப்பு மற்றும் பொடித்தவற்றை சேர்த்துக்கொள்ளவும்.

★இறுதியாக தாளித்த பொருட்களை சேமியாவில் சட்னியுடன் பரிமாறினால் சுவையான சேமியா மசாலா பொங்கல் தயார்.